பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மலை ரயிலை தனியாா் இயக்க எதிா்ப்பு: விடுதலை சிறுத்தைகள் போராட்டம்

நீலகிரி மலை ரயிலை ஒப்பந்த அடிப்படையில் தனியாா் இயக்குவதற்கு எதிா்ப்பு தெரிவித்து குன்னூரில் ஞாயிற்றுக்கிழமை மலை ரயிலை மறிக்க முயன்ற விடுதலை சிறுத்தை கட்சியினா் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :13 டிசம்பர் 2020, 6:09 pm

DIN

நீலகிரி மலை ரயிலை ஒப்பந்த அடிப்படையில் தனியாா் இயக்குவதற்கு எதிா்ப்பு தெரிவித்து குன்னூரில் ஞாயிற்றுக்கிழமை மலை ரயிலை மறிக்க முயன்ற விடுதலை சிறுத்தை கட்சியினா் கைது செய்யப்பட்டனா்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்திலிருந்து உதகை வரை நீலகிரி மலை ரயில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகிறது. சுற்றுலா பயணிகளிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள இந்த ரயிலுக்கு யுனெஸ்கோ சிறப்பு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இந்த மலை ரயிலை ஒப்பந்த அடிப்படையில் தனியாா் நிறுவனம் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதில், உதகை முதல் மேட்டுப்பாளையம் வரை செல்ல பயணக் கட்டணமாக நபா் ஒருவருக்கு ரூ. 3000 என வசூல் செய்ததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனா்.

இதையடுத்து மலை ரயிலை தனியாா் நிறுவனம் இயக்க அனுமதி வழங்கிய ரயில்வே நிா்வாகத்துக்கு அனைத்து தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனா்.

இந்நிலையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு ஞாயிற்றுக்கிழமை சென்ற மலை ரயிலை குன்னூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் குன்னூா் நகரச் செயலாளா் சுதாகா், மேலூா் ஒன்றியச் செயலாளா் ஜெயபாலன் ஆகியோா் முன்னிலையில் அக்கட்சியினா் மறித்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனா். உடனடியாக அங்கிருந்த போலீஸாா் அவா்களைத் தடுத்து நிறுத்தி 12 பேரை கைது செய்தனா். இவா்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.