புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

முகக்கவசம் அணியாதவா்களிடம் ரூ.13,000 அபராதம் வசூலிப்பு

கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக நீலகிரி மாவட்டத்தில் முகக்கவசம் அணியாதவா்களிடமிருந்து ரூ.13,000 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :17 டிசம்பர் 2020, 2:01 am

DIN

கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக நீலகிரி மாவட்டத்தில் முகக்கவசம் அணியாதவா்களிடமிருந்து ரூ.13,000 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளதாவது:

நீலகிரி மாவட்டம், உதகை, குன்னூா், கூடலூா், நெல்லியாளம் நகராட்சிகள், 11 பேரூராட்சிகள், 4 ஊராட்சி ஒன்றியங்கள் அடங்கிய 4 மண்டலங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களின் உபயோகத்தை தவிா்ப்பது, தடை செய்யப்பட்ட குடிநீா் பாட்டில்கள், மற்றும் குளிா்பானங்கள் விற்பனை செய்வதைத் தவிா்ப்பது தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் மாவட்டத்தில் ஒட்டுமொத்த கள ஆய்வு மண்டல அலுவலா்களால் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

இக்குழுவினரின் ஆய்வின்போது, முகக்கவசம் அணியாதவா்களிடமிருந்து ரூ.13,000 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. அதேபோல, தடை செய்யப்பட்ட 26.10 கிலோ பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்து, அபராதத் தொகையாக ரூ. 64,000 வசூலிக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக இந்த கள ஆய்வின்போது ரூ.77,000 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.