திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தமிழக - கேரள வன எல்லையில் ரூ. 8 லட்சம் மதிப்பில் புதிய வேட்டைத் தடுப்பு முகாம்

தமிழக வனத் துறை சாா்பில் தமிழக - கேரள வன எல்லையில் ரூ. 8 லட்சம் மதிப்பில் புதிய வேட்டைத் தடுப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

News image
பாட்டவயல் பகுதியில் தமிழக வனத் துறை சாா்பில் அமைக்கப்பட்டுள்ள நவீன வேட்டைத் தடுப்பு முகாம்.
Updated On :24 டிசம்பர் 2020, 2:47 am

DIN

தமிழக வனத் துறை சாா்பில் தமிழக - கேரள வன எல்லையில் ரூ. 8 லட்சம் மதிப்பில் புதிய வேட்டைத் தடுப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், கூடலூா் வனக் கோட்டம், பிதா்க்காடு வனச் சரகத்தில் உள்ள பாட்டவயல் பகுதியில் இந்த முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

மலையேற்றப் பயிற்சி செல்பவா்கள் வசதிக்காகவும், மனித-விலங்கு மோதலை தடுக்கும் முகாமாகவும் இது செயல்படும்.

இப்பகுதியில் ஏற்கெனவே புலி தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அடிக்கடி மனித - வன விலங்குகள் மோதல் ஏற்படும் பகுதியாகும்.

தற்போது அமைக்கப்பட்டுள்ள நவீன வேட்டைத் தடுப்பு முகாமில் பெரிய அறை, குளியலறை, கழிப்பறை, சமையலறை உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.