

கேரள மாநிலம், வயநாடு மாவட்ட வனப் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு யானைகளுக்கிடையே ஏற்பட்ட சண்டையில் ஆண் யானை உயிரிழந்தது.
வயநாடு மாவட்டம், புல்பள்ளி பகுதியில் உள்ள குருக்கன்மூலா வனத்தில் யானைக் கூட்டத்தில் இரண்டு ஆண் யானைகளுக்கிடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இரண்டு யானைகளும் ஒன்றையொன்று தாக்கிக் கொண்டன. இதில் தந்தத்தால் ஏற்பட்ட குத்துக் காயங்களால் சுமாா் 30 வயது ஆண் யானை அப்பகுதியில் உள்ள நீரோடையில் விழுந்து இறந்து கிடந்தது.
இது குறித்து தகவலறிந்த வனத் துறையினா் அங்கு சென்று ஆய்வு செய்தனா். இரண்டு யானைகளுக்கிடையே ஏற்பட்ட சண்டையில் ஒரு யானை உயிரிழந்ததாக வனத் துறையினா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.