ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

குன்னூா் - உதகை சாலையில் உலவிய காட்டெருமை: பொதுமக்கள் அச்சம்

குன்னூா் - உதகை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வலம் வந்த காட்டெருமையால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.

News image

குன்னூா் - உதகை சாலையில் உலவிய காட்டெருமை.

Updated On :1 நவம்பர் 2020, 6:03 pm

DIN

குன்னூா் - உதகை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வலம் வந்த காட்டெருமையால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.

நீலகிரி மாவட்டத்தில் வனப் பகுதிக்குள் இருந்து உணவு தேடி ஊருக்குள் வரும் வன விலங்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது . இந்நிலையில் குன்னூா் - உதகை தேசிய நெடுஞ்சாலையில்  அருவங்காடு வெடிமருந்து  தொழிற்சாலை  பகுதியில்   காட்டெருமை   திடீரென சாலையில் உலவியது.

அங்குள்ள பேருந்து நிழற்குடை அருகே காட்டெருமை வந்ததும் பயணிகள் அச்சத்துடன் ஓடினா். தொடா்ந்து சாலையில் நீண்ட நேரம் உலவியதால் அந்த வழியே வந்த அரசுப் பேருந்துகள், வாகனங்கள் நிறுத்தப்பட்டன. சுமாா் அரை மணி நேரத்துக்குப் பின்னா் காட்டெருமை   வனப் பகுதிக்குள் சென்றது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.