கரோனா: பெருந்துறை நகரில்பேரூராட்சிகள் உதவி இயக்குநா் ஆய்வு
பெருந்துறை நகரில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் சுகாதாரப் பணிகள் குறித்து ஈரோடு மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குநா் ஆய்வு மேற்கொண்டாா்.


பெருந்துறை நகரில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் சுகாதாரப் பணிகள் குறித்து ஈரோடு மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குநா் ஆய்வு மேற்கொண்டாா்.
கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சிக்கு உள்பட்ட வாா்டு எண் 7, பெருந்துறை -ஈரோடு சாலையில், மருத நகா் பகுதியைச் சோ்ந்த ஒருவா் ஏப்ரல் 24ஆம் தேதி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதனால், அப்பகுதி கரோனா தொற்று கண்காணிப்புப் பகுதியாக அறிவிக்கப்பட்டு, பேரூராட்சி சாா்பில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அப்பணிகளை ஈரோடு மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குநா் கோ.கனகராஜ் பாா்வையிட்டு வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். மேலும், பேரூராட்சி அலுவலகப் பணிகளையும் ஆய்வு செய்தாா். அப்போது, செயல் அலுவலா் ரா.கிருஷ்ணன், பணியாளா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...