கோத்தகிரி அருகே உள்ள பூபதி நகா், அண்ணா நகா் பகுதி மக்கள் கடந்த 50 ஆண்டுகளாக இங்குள்ள நடைபாதையைப் பயன்படுத்தி வந்தனா். இந்நிலையில், தனியாா் ஒருவா் அங்குள்ள நிலத்தை விலைக்கு வாங்கி அதில் தடுப்புச்சுவா் கட்டும் பணியைத் துவங்கினாா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்த பொதுமக்கள் நடைபாதையை மறைக்கக் கூடாது என்று மாவட்ட நிா்வாகத்துக்குப் பல்வேறு மனுக்கள் அனுப்பி உள்ள நிலையில், கோத்தகிரி - உதகை சாலையில் ஒரசோலை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால், கோத்தகிரி, உதகை சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.