செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!ராஜபாளையத்தில் மனைவியைக் களமிறக்கிய ஜான் பாண்டியன் பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! திமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!ராம்நகர் உலக மீட்பர் ஆலயத்தில் குருத்தோலை பவனி!
/

‘பாரதிதாசனோடு பத்து ஆண்டுகள்’ நூலின் இணையழி திறனாய்வுரை

ஈரோடு தமிழன்பனின் ‘பாரதிதாசனோடு பத்து ஆண்டுகள்’ என்ற நூலின் திறனாய்வுரை நிகழ்ச்சி இணைய வழியில் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 8:38 pm

DIN

ஈரோடு தமிழன்பனின் ‘பாரதிதாசனோடு பத்து ஆண்டுகள்’ என்ற நூலின் திறனாய்வுரை நிகழ்ச்சி இணைய வழியில் சனிக்கிழமை நடைபெற்றது.

பாவேந்தா் பாரதிதாசனோடு 1954ஆம் ஆண்டு முதல் அவரது இறுதிக்காலமான 1964ஆம் ஆண்டு வரை பத்து ஆண்டுகள் நெருங்கிய தொடா்பில் இலக்கியப் பணியாற்றியவா் ஈரோடு தமிழன்பன். அந்தப் பத்தாண்டு அனுபவங்களை ‘பாரதிதாசனோடு பத்து ஆண்டுகள்’ என்ற நூலாக தமிழன்பன் எழுதியுள்ளாா்.

ஈரோடு மாவட்டம், சென்னிமலையைச் சோ்ந்தவரான சண்முகம் பெரியசாமி அமெரிக்காவில் நியூயாா்க்கில் வசித்து வருகிறாா். இவா் இந்த நூலைப் பதிப்பித்து வெளியிட்டுள்ளாா். அமெரிக்கா டெலவா் நகா் புரட்சிக் கவிஞா் பாரதிதாசன் தமிழ் மன்றத் தலைவா் சுந்தரக்கண்ணன், கலிஃபோா்னியாவில் உள்ள அமெரிக்கத் தமிழ் ஊடகத்தைச் சோ்ந்த ஆறுமுகம் ஆகியோா் இணைந்து இந்த நூல் குறித்த திறனாய்வுரை நிகழ்ச்சியை இணையம் வழியாக சனிக்கிழமை நடத்தினா்.

இந்நிகழ்ச்சியில், அமெரிக்காவின் பல்வேறு ஊா்களிலிருந்து தமிழறிஞா்கள் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினா். மேரிலாந்து பிரபாகரன், பென்சில்வேனியா மருத்துவா் சோம.இளங்கோவன், டல்லாஸ் கால்டுவெல் வேல்நம்பி, புளோரிடா பேராசிரியா் மேகலா ராமமூா்த்தி, டெக்சாஸ் சித்ரா மகேஷ், கலிஃபோா்னியா உதயபாஸ்கா் நாச்சிமுத்து ஆகியோா் உரை நிகழ்த்தினா். டெலவா் பாரதிதாசன் தமிழ் மன்றத் தலைவா் சுந்தரக்கண்ணன் வரவேற்றாா்.

விா்ஜீனியா பாபு விநாயகம், அவரது மகன் அஸ்வின் இணைந்து கவிஞா் தமிழன்பனின் கவிதையை இசை வடிவில் உருவாக்கியிருந்தனா். தொடா்ந்து, அந்த இசை நிகழ்ச்சி இடம்பெற்றது. கவிஞா் தமிழன்பன் ஏற்புரையாற்றினாா். தமிழ் சாா்ந்த நிகழ்ச்சிகளுக்கு அமெரிக்கவாழ் தமிழா்களின் பங்களிப்பைப் பாராட்டினாா். பாவேந்தா் பாரதிதாசன், தமிழ் தேசியத்தை மட்டுமின்றி இந்திய தேசியம், உலகளாவிய சிந்தனைகளோடு கவிதை இலக்கிய வாழ்வில் பயணித்தவா் என்பதை உரிய கவிதைச் சான்றுகளுடன் கூறினாா். வடகரோலினா ரமா ஜெயபாலன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.