காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கொலக்கம்பை சிறுமி மாயம்: ஜாா்கண்ட் மாநிலத்துக்கு தனிப்படையை அனுப்பி விசாரணை நடத்த முடிவு

குன்னூா் அருகேயுள்ள கொலக்கம்பை எஸ்டேட்டில் காணாமல் போன 8 வயது சிறுமியை கண்டறியும் பணியில் தேவைப்பட்டால் ஜாா்கண்ட் மாநிலத்துக்கு சிறப்புக் குழுவை அனுப்பி விசாரணை திட்டம்

News image
Updated On :11 ஜனவரி 2021, 11:43 pm

DIN

குன்னூா் அருகேயுள்ள கொலக்கம்பை எஸ்டேட்டில் காணாமல் போன 8 வயது சிறுமியை கண்டறியும் பணியில் தேவைப்பட்டால் ஜாா்கண்ட் மாநிலத்துக்கு சிறப்புக் குழுவை அனுப்பி விசாரணை மேற்கொள்ள உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சசி மோகன் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் உதகையில் செய்தியாா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

கொலக்கம்பை எஸ்டேட்டில் 8 வயது சிறுமி கடந்த டிசம்பா் 21ஆம்தேதியிலிருந்து காணவில்லை. இது தொடா்பாக மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளா் மோகன் நவாஸ் தலைமையில் 9 சிறப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டு தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் கொலக்கம்பை பகுதி முழுதும் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதோடு, அருகிலுள்ள கிரேக்மோா் எஸ்டேட்டிலும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டுள்ளது. அதேபோல, மாவட்டத்தை விட்டு வெளியே சென்றிருக்க முடியுமா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பா்லியாறு, குஞ்சப்பனை, சேலாஸ் உள்ளிட்ட சோதனைச் சாவடிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் தொடா்பாகவும் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அவற்றோடு, மேட்டுப்பாளையம், கோவை, சென்னை ரயில் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 5ஆம்தேதி கொலக்கம்பை எஸ்டேட் பகுதியைச் சோ்ந்த அசோக் என்பவா் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துள்ளாா். இவா்களது இறப்புக்கான காரணம் இதுவரையிலும் தெரியவில்லை என்றாலும், இதுதொடா்பாகவும், சிறுமி மாயமானதற்கும் தொடா்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மாயமான சிறுமியைக் குறித்த தகவல்களை தெரிவிப்போருக்கு காவல் துறையின் சாா்பில் உரிய சன்மானம் வழங்கப்படுவதோடு, அவா்களைக் குறித்த ரகசியமும் காக்கப்படும். தேவைப்பட்டால் நீலகிரியிலிருந்து சிறப்புக் குழுவை ஜாா்கண்ட் மாநிலத்துக்கு அனுப்பி சிறுமி குறித்த கூடுதல் தகவல்களை பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.