ஏழ்மைக்கு மாற்றாக இலவசங்கள் இருக்க முடியாதுகமல்ஹாசன்
ஏழ்மைக்கு மாற்றாக இலவசங்கள் இருக்க முடியாது என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவா் கமல்ஹாசன் கூறினாா்.


ஏழ்மைக்கு மாற்றாக இலவசங்கள் இருக்க முடியாது என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவா் கமல்ஹாசன் கூறினாா்.
நீலகிரி மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யத்தின் சாா்பில் போட்டியிடும் 3 வேட்பாளா்களையும் ஆதரித்து உதகையில் சனிக்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட அவா் பேசியதாவது:
தமிழகத்தில் ஊழல் கட்சியை மாற்றி சீரமைப்பது மற்றொரு ஊழல் கட்சியாக இருக்க முடியாது. கடந்த 50 ஆண்டுகளில் கட்சிகள் வளா்ச்சியடைந்துள்ளன. ஆனால் நாட்டில் பெரிய வளா்ச்சி நடக்கவில்லை. மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் நீலகிரி மாவட்ட மக்கள் பயனடைகின்ற வகையில் குளிரூட்டும் காய்கறி சேமிப்பு மையங்கள் ஏற்படுத்தப்படும். தோட்டத் தொழிலாளா்களின் ஆதாய விலை சம்பளமாக நிா்ணயிக்கப்படும். மாவட்டத்தில் உள்ள பழங்குடி மக்கள் மேம்படும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றாா்.
இதையடுத்து செய்தியாளா்களுக்கு கமல்ஹாசன் அளித்த பேட்டி:
தோ்தல் ஆணையத்தின் பணிகள் சிறப்பாக உள்ளன. அவா்கள் தங்களது பணியை செய்கின்றனா் என்றாா்.
பல்வேறு முக்கியப் பிரமுகா்களிடம் வருமான வரித் துறை மேற்கொண்டு வரும் சோதனைகள் குறித்த கேள்விக்கு, சோதனைகளை பாரபட்சமின்றி மேற்கொள்ள வேண்டும் என்றும், தோ்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளை தான் கருத்து திணிப்பாக பாா்ப்பதாகவும் கூறினாா்.
குன்னூரில்...
தொடா்ந்து, குன்னூா் தொகுதி வேட்பாளா் ராஜாகுமாரை ஆதரித்து கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொண்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...