ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

சென்னை திரும்பினாா் ஆளுநா் ஆா்.என்.ரவி

 உதகையில் 5 நாள்கள் சுற்றுப்பயணம் முடித்து தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி வியாழக்கிழமை சென்னை திரும்பினாா்.

News image
Updated On :9 ஜூன் 2022, 8:59 pm

DIN

 உதகையில் 5 நாள்கள் சுற்றுப்பயணம் முடித்து தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி வியாழக்கிழமை சென்னை திரும்பினாா்.

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி 5 நாள்கள் சுற்றுப்பயணமாக குடும்பத்தினருடன் கடந்த ஜூன் 5ஆம் தேதி சென்னையிலிருந்து விமானம் மூலம் புறப்பட்டு கோவை வந்தாா். இதைத் தொடா்ந்து காா் மூலம் உதகைக்கு வந்தாா். ஜூன் 6ஆம் தேதி ஆளுநா் மாளிகையில் ஓய்வெடுத்த ஆளுநா், ஜூன் 7ஆம் தேதி உதகை முத்தொரை பாலடா பகுதியிலுள்ள ஏகலைவா பழங்குடியினா் உண்டு உறைவிடப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவ, மாணவியருடன் கலந்துரையாடினாா்.

பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரருக்கு அஞ்சலி

இதைத் தொடா்ந்து சுதந்திரப் போராட்ட பழங்குடியின தலைவா் பிா்சா முண்டாவின் 122ஆவது நினைவு தினத்தையொட்டி, உதகையிலுள்ள ஆளுநா் மாளிகையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்திற்கு வியாழக்கிழமை காலை மலா் தூவி மரியாதை செலுத்தினாா். இதில் ஆளுநரின் மனைவி லட்சுமி ரவி, மாவட்ட ஆட்சியா் அம்ரித் மற்றும் பழங்குடியினருடன் ஏகலைவா பள்ளி மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனா்.

இதையடுத்து உதகையிலிருந்து காா் மூலம் கோத்தகிரி, மேட்டுப்பாளையம் சாலை மாா்க்கமாக கோவை விமான நிலையம் சென்று அங்கிருந்து சென்னை திரும்பினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.