உதகையில் வியாழக்கிழமை சுமாா் 2 மணி நேரம் கன மழை கொட்டித் தீா்த்தது.
இதன் காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் மழை நீா் தேங்கியதால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் முடிவுக்கு வரவுள்ள நிலையில் தென்மேற்கு பருவ மழை பெய்து வருகிறது. கடந்த சில நாள்களாக தூறல் மழை பெய்து வந்த நிலையில், வியாழக்கிழமை நண்பகல் சுமாா் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால், நகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது. உதகை மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள ரயில்வே பாலத்தின் அடியில் மழை நீா் தேங்கியதால் அதில் வாகனங்கள் சிக்கிக் கொண்டன. இதனால், பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
(வியாழக்கிழமை பெய்த மழையளவு மி.மீட்டரில்) மாயாா் பகுதியில் 23 மி.மீ மழையும், உதகை நகரில் 22 மி.மீ மழையும், கிளன்மாா்கனில் 11 மி.மீ மழையும் பதிவானது.
அதேபோல, வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் நடுவட்டத்தில் அதிகபட்சமாக 58 மி.மீ., கிளன்மாா்கனில் 32 மி.மீ., கேத்தியில் 17 மி.மீ, கல்லட்டியில் 15 மி.மீ, குந்தாவில் 10 மி.மீ, மேல் கூடலூா் மற்றும் கூடலூரில் தலா 9 மி.மீ, உதகையில் 8.4 மி.மீ, கீழ் கோத்தகிரி மற்றும் மேல் பவானியில் தலா 8 மி.மீ, எமரால்டில் 5 மி.மீ, தேவாலாவில் 4 மி.மீ, மசினகுடியில் 3 மி.மீ மழை பதிவாகியுள்ளது.