உதகை: ஊருக்குள் சுற்றி வந்த இரண்டு கரடிகளை இன்று அதிகாலை வனத்துறை வைத்த கூண்டில் அகப்பட்டது.
உதகை வனகோட்டம், கட்டபேட்டு வனசரகம், உயிலட்டி கிராமத்தில் கடந்த சில நாட்களாக ஊருக்குள் சுற்றி வந்த இரண்டு கரடிகளை இன்று அதிகாலை வனத்துறை வைத்த கூண்டில் அகப்பட்டது.
இதையும் படிக்க: திருப்பத்தூரில் தொடர் கனமழை: ஆண்டியப்பனூர் அணை நிரம்பியது!
பிடிபட்ட இரண்டு கரடிகளை முதுமலை புலிகள் காப்பக, உள்மண்டல பகுதியில் கள இயக்குநர் அறிவுரையின் படி உள்மண்டல துணை இயக்குனர் (core zone) திருமதி சி.வித்யா, இ.வ.ப அவர்கள் முன்னிலையில், வனசரக அலுவலர்கள் தெப்பக்காடு, கட்டபேட்டு மற்றும் கள பணியாளர்கள் உதவியுடன், உதவி கால் நடை மருத்துவர் ஆலோசனையின் படி பாதுகாப்பாக வன பகுதியில் விடபட்டது.