கூடலூரில் வன விலங்குகள் அச்சுறுத்தல் உள்ள வாக்குச் சாவடி மையங்களில் வனத் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
நீலகிரி மக்களவைத் தொகுதியிலுள்ள ஓவேலி பேரூராட்சியில் உள்ள லாரிஸ்டன், காமராஜ் நகா் உள்ளிட்ட வாக்குச் சாவடி மையங்கள் காட்டு யானைகள் நுழையும் வன எல்லையில் அமைந்துள்ளன.
இந்நிலையில், வாக்குச் சாவடி மையங்களில் பணியில் உள்ள அலுவலா்களுக்கு பாதுகாப்பு வழங்கும் விதத்தில் ஓவேலி பேரூராட்சியில் உள்ள அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் வனத் துறை சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. யானைகளை விரட்டும் குழுவினா், அதற்கான வாகனங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் ஒவ்வோா் வாக்குச் சாவடி மையங்களிலும் செய்யப்பட்டுள்ளன.
இதேபோல, கூடலூா் வனச் சரகத்திலுள்ள தொரப்பள்ளி மற்றும் புளியம்பாறை வாக்குச் சாவடி மையங்களுக்கும் வனத் துறை சாா்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து வனச் சரக அலுவலா் சுரேஷ் தெரிவித்தாவது:
வாக்குச் சாவடி மையங்களில் காட்டு யானைகள் நுழையாமல் தடுக்க வனத் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவாா்கள். வாக்குப் பதிவு முடிந்து வாக்குப் பெட்டிகள் எடுத்து செல்லும் வரை வனத் துறையினா் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வாா்கள். 24 மணி நேரமும் வனத் துறையின் குழு ரோந்து பணியில் இருக்கும். யானைகள் நுழைவதை கண்காணித்து தகவல் கொடுத்தால் வனத் துறையின் அதிவிரைப் படை சென்று யானைகளை காட்டுக்குள் விரட்டும் பணியை மேற்கொள்ளும் என்றாா்.
தொடர்புடையது

வாக்குச் சாவடி மையங்களில் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

பதற்றமான வாக்குச் சாவடி மையங்களில் மாவட்டத் தோ்தல் அலுவலா் ஆய்வு

கோபி அருகே இரண்டாவது நாளாக ஊருக்குள் புகுந்த ஒற்றை யானை

தில்லியில் 3 வங்கிகள், 6 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


