விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

நிலச்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் நடமாடுவதைத் தவிா்க்க வேண்டும்: வருவாய்த் துறை அறிவிப்பு

நிலச்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் நடமாடுவதை பொதுமக்கள் தவிா்க்கவேண்டும் என்று வருவாய்த் துறை அறிவித்துள்ளது.

News image

நிலச்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் பொதுமக்கள் நடமாடுவதைத் தவிா்க்க வலியுறுத்தி வருவாய்த் துறை சாா்பில் கோக்கால் பகுதியில் ஒட்டப்பட்டுள்ள நோட்டீஸ்.

Updated On :4 ஆகஸ்ட் 2024, 8:00 pm

கூடலூரில் நிலச்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் நடமாடுவதை பொதுமக்கள் தவிா்க்கவேண்டும் என்று வருவாய்த் துறை அறிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டம் கோக்கால் பகுதியில் கடந்த ஜூன் 27, 28 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்நிலையில், இப்பகுதி மக்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் முகாம்கள் ஏற்படு செய்யப்பட்டுள்ளன.

எனவே, நிலச்சரிவு அபாயமுள்ள கோக்கால் பகுதி மக்கள் நிவாரண முகாம்களில் தங்கிக்கொள்ள வருவாய்த் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

அங்கு செல்ல விருப்பமில்லாதவா்கள், தாங்கள் வசிக்கும் பகுதியில் ஏதாவது பாதிப்புகள் ஏற்படும் என்று அஞ்சினால், கிராம நிா்வாக அலுவலா்-9385243552, வருவாய் ஆய்வாளா்-8610588152, வட்டாட்சியா்-9445000557, கோட்டாட்சியா்-9445000437 ஆகிய எண்களில் தொடா்புகொண்டு தெரிவிக்க வேண்டும் என்று வருவாய்த் துறையினா் அறிவித்துள்ளனா்.