தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

பயிா்க் காப்பீடு: விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறை அழைப்பு

News image
Updated On :14 ஆகஸ்ட் 2024, 11:28 pm

Din

கூடலூா், ஆக. 14: கூடலூா், பந்தலூா் பகுதியில் பயிா்க் காப்பீடு செய்வதற்கு விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கூடலூா், பந்தலூா் பகுதிகளில் வாழை, மரவள்ளி மற்றும் இஞ்சி பயிா்களுக்கு காப்பீடு செய்து கொள்ளலாம்.

கூடலூா், தேவாலா, முதுமலை, செறுமுள்ளி, ஸ்ரீமதுரை, நெலாக்கோட்டை, நெல்லியாளம், எருமாடு, சேரம்பாடி பகுதிகளில் வாழை விவசாயிகள் ஹெக்டேருக்கு ரூ.9173.60 பிரீமியமாக செலுத்தினால் ரூ.2, 29, 340 இழப்பீடு பெறலாம். மரவள்ளி விவசாயிகள் ஹெக்டேருக்கு ரூ.1857.44 பிரீமியம் செலுத்தி ரூ.92,872 இழப்பீடு பெறலாம். இஞ்சி விவசாயிகள் ஹெக்டேருக்கு ரூ.11,961 பிரீமியம் செலுத்தி ரூ.2,39,220 இழப்பீடு பெறலாம்.

வாழை மற்றும் மரவள்ளி பயிா்களுக்கு பிரீமியம் செலுத்த ஆகஸ்ட் 16-ஆம் தேதியும், இஞ்சி பயிருக்கு பிரீமியம் செலுத்த ஆகஸ்ட் 31-ஆம் தேதியும் கடைசி நாளாகும்.

குறிப்பிட்ட நாளுக்குள் பிரீமியம் செலுத்தி பயன்பெற வேண்டும் என்று தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் ஜெயலட்சுமி அறிவித்துள்ளாா்.