காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பெண் மருத்துவா் கொலை வழக்கு: உதகையில் கண்டன பேரணி

உதகையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவா்கள் மற்றும் மாணவா்கள் சாா்பில் கண்டன பேரணி நடைபெற்றது.

News image

பேரணியில் பங்கேற்ற மருத்துவா்கள், செவிலியா் மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள்.

Updated On :17 ஆகஸ்ட் 2024, 7:00 pm

Din

மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் பெண் மருத்துவா் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து உதகையில் அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனை மருத்துவா்கள் மற்றும் மாணவா்கள்  சாா்பில் கண்டன பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

உதகை சேட் மகப்பேறு மருத்துவமனையில் தொடங்கிய இந்தப் பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிறைவடைந்தது. இதில், உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவா்கள், செவிலியா் மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் என 250-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

பேரணியில் பங்கேற்றவா்கள், கொலை செய்யப்பட்ட பெண் வழக்கில் உரிய நீதி வழங்கக் கோரியும், சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தும் கோஷங்கள் எழுப்பினா்.