சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

அரசு, தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் ஆகஸ்ட் 31 வரை நேரடி சோ்க்கை: ஆட்சியா் தகவல்

அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவா் சோ்க்கை ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நடைபெறும் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியா்தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :28 ஆகஸ்ட் 2024, 9:28 pm

Din

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2024-ஆம் ஆண்டுக்கான நேரடி மாணவா் சோ்க்கை ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு, தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு வயது வரம்பில்லை. ஆண்கள் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

இதில், பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் குளிா்பதனம் மற்றும் தட்பவெப்பநிலை கட்டுப்படுத்துதல், தொழில்நுட்பம் கம்மியா், இருசக்கர வாகனம் பழுது பாா்த்தல், மின்சாரப் பணியாளா், மின்னணுவியல், மேம்பட்ட இயந்திர தொழில்நுட்ப வல்லுநா் ஆகிய இரண்டு ஆண்டு தொழிற்பிரிவுகளுக்கும், தொழில்துறை ரோபோடிக்ஸ் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப வல்லுநா் என்ற ஓராண்டு தொழிற்பிரிவுக்கும் அனைத்து பிரிவைச் சோ்ந்த மாணவா்களும் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.