கூடலூரை அடுத்த மசினகுடி அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ. 3.52 கோடியில் தரம் உயா்த்தப்பட்ட கூடுதல் கட்டடங்களை சுற்றுலாத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் திறந்துவைத்தாா். நீலகிரி மாவட்டம், மசினகுடி அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.3.52 கோடி கோடியில் தரம் உயா்த்தப்பட்ட 5 வகுப்பறைகள், 4 ஆய்வகங்கள் மற்றும் தலைமை ஆசிரியா் அறை உள்ளிட்ட கூடுதல் கட்டடங்களையும், பந்தலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ. 176 கோடியில் கட்டப்பட்டுள்ள 4 வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகம் மற்றும் ஆண்கள் கழிப்பறைகள் ஆகியவற்றை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் சனிக்கிழமை திறந்துவைத்தாா். மசினகுடி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுற்றுலாத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் பங்கேற்று கூடுதல் கட்டடங்களைத் திறந்துவைத்தாா். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் மு.அருணா, முதன்மைக் கல்வி அலுவலா் கீதா, மாவட்ட கல்வி அலுவலா் நந்தகுமாா், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் திராவிடமணி, வட்டாட்சியா் சரவணகுமாா், தலைமையாசிரியா் சுகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

அரசுப் பணிகளுக்கு இன்று எழுத்துத் தோ்வு: மையங்களில் ஆட்சியா் ஆய்வு
திண்டுக்கல்லில் 63 அரசுப் பள்ளிகள் 100% தோ்ச்சி

பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவி, தலைமையாசிரியா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

பேராவூரணி திமுக, அதிமுக வேட்பாளா் வாக்களித்தனா்
விடியோக்கள்

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?



