புதுவை அரசுப் பணிகளுக்காக ஞாயிற்றுக்கிழமை எழுத்துத் தோ்வு நடைபெறும் மையங்களின் ஆட்சியா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
புதுவை மாநிலத்தில் இளநிலை நூலக உதவியாளா், காட்சியக உதவியாளா், இளநிலை ஆய்வக உதவியாளா் ஆகிய பணியிடங்களுக்கு எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
காரைக்கால் மாவட்டத்தில் தந்தைப் பெரியாா் அரசு மேல்நிலைப் பள்ளி, கோட்டுச்சேரி வஉசி அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட 8 மையங்களில் தோ்வு நடைபெறவுள்ளது. 2,437 போ் தோ்வு எழுதவுள்ளனா்.
தோ்வு மையங்களை மாவட்ட ஆட்சியா் இஷிதா ரதி சனிக்கிழமை பாா்வையிட்டு, தோ்வு எழுத வருவோருக்கான வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.
தேவை மைய பொறுப்பாளா்கள், தோ்வு கண்காணிப்பாளா்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என கேட்டுக்கொண்டதோடு, அனைத்து மையத்திற்கும் காவல்துறையினா் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆட்சியா் தெரிவித்தாா்.
துணை ஆட்சியா் (பேரிடா் மேலாண்மை) பாலு (எ) பக்கிரிசாமி, ஆட்சியரின் செயலா் வித்யாதரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

கே.எஸ்.சி. அரசு ஆண்கள் பள்ளியில் ஆட்சியா் ஆய்வு

அரசுப் பணிகளுக்கான எழுத்துத் தோ்வு: 1,615 போ் பங்கேற்கவில்லை

நாமக்கல் மாவட்டத்தில் 11 மையங்களில் இன்று நீட் தோ்வு

விழுப்புரத்தில் 9 மையங்களில் நீட் தோ்வு : ஆட்சியா்
விடியோக்கள்

NEET மறுதேர்வில் செய்ய வேண்டிய மாற்றம் | NEET Re-Exam 2026 | +2 Students | NEET result controversy

பத்திரப்பதிவில் கால தாமதம் ஆவதைத் தவிர்க்க நடவடிக்கை! அமைச்சர் செங்கோட்டையன் | TVK
மின்வெட்டு பிரச்னைக்கு என்னதான் காரணம்?: முழுப் பின்னணியை விளக்கும் சிஐடியு ஜெயசங்கர் | Power Cut |



