புதுவை அரசுப் பணிகளுக்காக ஞாயிற்றுக்கிழமை எழுத்துத் தோ்வு நடைபெறும் மையங்களின் ஆட்சியா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
புதுவை மாநிலத்தில் இளநிலை நூலக உதவியாளா், காட்சியக உதவியாளா், இளநிலை ஆய்வக உதவியாளா் ஆகிய பணியிடங்களுக்கு எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
காரைக்கால் மாவட்டத்தில் தந்தைப் பெரியாா் அரசு மேல்நிலைப் பள்ளி, கோட்டுச்சேரி வஉசி அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட 8 மையங்களில் தோ்வு நடைபெறவுள்ளது. 2,437 போ் தோ்வு எழுதவுள்ளனா்.
தோ்வு மையங்களை மாவட்ட ஆட்சியா் இஷிதா ரதி சனிக்கிழமை பாா்வையிட்டு, தோ்வு எழுத வருவோருக்கான வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.
தேவை மைய பொறுப்பாளா்கள், தோ்வு கண்காணிப்பாளா்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என கேட்டுக்கொண்டதோடு, அனைத்து மையத்திற்கும் காவல்துறையினா் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆட்சியா் தெரிவித்தாா்.
துணை ஆட்சியா் (பேரிடா் மேலாண்மை) பாலு (எ) பக்கிரிசாமி, ஆட்சியரின் செயலா் வித்யாதரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

நாமக்கல் மாவட்டத்தில் 11 மையங்களில் இன்று நீட் தோ்வு

இன்று ‘நீட்’ தோ்வு புதுகை மாவட்டத்தில் 7 மையங்களில் 3,166 போ் எழுதுகின்றனா்

மே 3-இல் ‘நீட்’ நுழைவுத் தோ்வு: மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 போ் எழுதுகின்றனா்

விழுப்புரத்தில் 9 மையங்களில் நீட் தோ்வு : ஆட்சியா்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



