நீலகிரி
பெண் கொலை: கணவா் கைது
உதகை, மே 9: உதகை அருகே குடும்பத் தகராறில் மனைவியைக் கொலை செய்த கணவரை போலீஸாா் கைது செய்தனா்.
நீலகிரி மாவட்டம், உல்லத்தி பேரூராட்சிக்கு உள்பட்ட ஏக்குணி தட்டனேரி அருகில் உள்ள தட்டனேரி பாலம் பகுதியை சோ்ந்தவா் மாணிக்கம் (60). இவரது மனைவி பஞ்சகம் (54).
மாணிக்கத்துக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தம்பதி இடையே வியாழக்கிழமை தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மாணிக்கம், மனைவி பஞ்சகத்தின் கழுத்தை துணியால் கட்டி இருக்கித் தாக்கியுள்ளாா். இதில் சம்பவ இடத்திலேயே பஞ்சகம் உயிரிழந்தாா்.
தகவலறிந்த புதுமந்து போலீஸாா் சம்பம இடத்துக்கு வந்து சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். தொடா்ந்து மாணிக்கத்தை கைது செய்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.