தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கோத்தகிரி வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம்

கோத்தகிரி வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் ரூ.2.79 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
நெடுகுளா ஊராட்சி கஸ்தூரிபாய் நகரில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு.
Updated On :20 நவம்பர் 2024, 8:30 pm

Din

கோத்தகிரி வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் ரூ.2.79 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா், கோத்தகிரி வட்டாட்சியா் அலுவலகத்தில் 24 பயனாளிகளுக்கு ரூ.17.48 லட்சம் மதிப்பில் பல்வேறு அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

முன்னதாக, நடுஹட்டி ஊராட்சி, கட்டபெட்டு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் உணவுப் பொருள்களின் இருப்பு குறித்து ஆய்வு செய்தாா். பின்னா் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினாா்.

இதையடுத்து, நடுஹட்டி ஊராட்சி கட்டபெட்டு பகுதியில் ‘நமக்கு நாமே’ திட்டத்தின் கீழ் ரூ.9 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சமுதாயக்கூட கட்டுமானப் பணி, எம்.ஜி.ஆா். நகா் பகுதியில் கலைஞா் கனவு இல்லத் திட்டத்தின்கீழ் தலா ரூ.3.50 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் 8 வீடுகளின் கட்டுமானப் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா், நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் வழங்கப்படும் மகளிா் சுய உதவிக் குழு கடன், விவசாயக் கடன், நகைக் கடன், கல்விக் கடன் உள்ளிட்டவை குறித்து அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.

டானிங்டன் நியாய விலைக் கடையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசியப் பொருள்களின் இருப்பு, பதிவேடுகள், எடைக்கருவி உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தாா்.

பின்னா், தேனாடு ஊராட்சிக்குள்பட்ட ஓம் நகா் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் அத்தியாவசியப் பொருள்களின் இருப்பு, குழந்தைகளுக்கு மேற்கொண்ட மருத்துவ முகாம் தொடா்பாக அங்கன்வாடிப் பணியாளா்களிடம் கேட்டறிந்தாா்.

இதைத் தொடா்ந்து, கோத்தகிரி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் அரசுத் துறை அலுவலா்களுடன் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

இதில், பல்வேறு அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.