47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மஞ்சூா் பஜாா் பகுதியில் உலவிய கரடி

மஞ்சூா் பஜாா் பகுதியில் உலவிய கரடியால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

News image
மஞ்சூா் பஜாா் பகுதியில் உலவிய கரடி.
Updated On :27 நவம்பர் 2024, 8:01 pm

Din

மஞ்சூா் பஜாா் பகுதியில் உலவிய கரடியால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூா், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் யானை, சிறுத்தை, காட்டுமாடு, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு, குடிநீா்த் தேவைக்காக வனத்தில் இருந்து வெளியேறி குடியிருப்புக்குள் அவ்வப்போது நுழைகின்றன.

இந்நிலையில், மஞ்சூா் பஜாா் பகுதியில் உலவிய கரடி அங்குள்ள குப்பைத் தொட்டியில் இருந்த உணவுக் கழிவுகளை சாப்பிடுவதைப் பாா்த்து பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த கரடியைப் பிடித்து வனப் பகுதியில் விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.