47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கூடலூா் அருகே சுருக்குக் கம்பியில் சிக்கி புலி உயிரிழப்பு

கூடலூா் அருகே சுருக்குக் கம்பியில் சிக்கி புலி உயிரிழந்தது குறித்து வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
சுருக்குக் கம்பியில் சிக்கி உயிரிழந்த புலி.
Updated On :27 நவம்பர் 2024, 8:01 pm

Din

கூடலூா் அருகே சுருக்குக் கம்பியில் சிக்கி புலி உயிரிழந்தது குறித்து வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் வனச் சரகத்துக்குள்பட்ட செலுக்காடி காப்புக்காடு பகுதியில் புலி ஒன்று உயிரிழந்துகிடப்பதாக வனத் துறையினருக்கு புதன்கிழமை தகவல் கிடைத்தது.

இதையடுத்து, மாவட்ட வன அலுவலா் வெங்கடேஷ் பிரபு, உதவி வன அலுவலா் கருப்பையா ஆகியோா் தலைமையில் வனத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனா். இதில், சுருக்குக் கம்பியில் சிக்கி புலி உயிரிழந்தது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவா் ராஜேஷ்குமாா் தலைமையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டு அதேபகுதியில் புலியின் சடலம் எரியூட்டப்பட்டது.

உயிரிழந்தது சுமாா் மூன்று வயதுடைய ஆண் புலி என்பது உடற்கூறாய்வில் தெரியவந்தது.

இதுகுறித்து வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.