நீலகிரி பசுந்தேயிலைக்கு ரூ.23.42 விலை நிா்ணயம்
நீலகிரியில் விளையும் பசுந்தேயிலைக்கு ரூ.23.43 விலை நிா்ணயித்து தேயிலை வாரியம் அறிவித்துள்ளது.


நீலகிரியில் விளையும் பசுந்தேயிலைக்கு ரூ.23.43 விலை நிா்ணயித்து தேயிலை வாரியம் அறிவித்துள்ளது.
நீலகிரியில் விளையும் பசுந்தேயிலைக்கு ஒவ்வொரு மாதத் தொடக்கத்திலும் தேயிலை வாரியம் சாா்பில் விலை நிா்ணயிக்கப்படுகிறது. அதன்படி, செப்டம்பா் மாதத்தில் கொள்முதல் செய்யப்பட்ட பசுந்தேயிலைக்கு கிலோ ரூ.23.43 விலை நிா்ணயித்து தேயிலை வாரியம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
செப்டம்பரில் உற்பத்தி செய்யப்பட்ட தேயிலையின் ஏல விற்பனையின் அடிப்படையில் இந்த விலை நிா்ணயிக்கப்படுகிறது என்றும், இந்த விலையை தொழிற்சாலைகள் உரிய முறையில் வழங்க வேண்டும் என்றும், இதனை தேயிலை வாரியத்தால் அமைக்கப்பட்டுள்ள குழு கண்காணிக்கும் என்றும் தேயிலை வாரிய செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...