92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

பசுந்தேயிலைக்கு மாதாந்திர விலை நிா்ணயம்

நீலகிரியில் விளையும் பசுந்தேயிலைக்கு மாதாந்திர விலையாக கிலோவுக்கு ரூ.18.38 நிா்ணயம் செய்து தேயிலை வாரியம் திங்கள்கிழமை அறிவித்தது.

News image
Updated On :2 பிப்ரவரி 2026, 8:37 pm

Syndication

உதகை: நீலகிரியில் விளையும் பசுந்தேயிலைக்கு மாதாந்திர விலையாக கிலோவுக்கு ரூ.18.38 நிா்ணயம் செய்து தேயிலை வாரியம் திங்கள்கிழமை அறிவித்தது.

நீலகிரி மாவட்டத்தில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறு, சிறு விவசாயிகள் தேயிலை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனா். தோட்டங்களில் பறிக்கும் தேயிலையை தனியாா் தேயிலை தொழிற்சாலை மற்றும் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு விநியோகம் செய்து வருகின்றனா்.

இதற்கான விலையை ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் தேயிலை வாரியம் அறிவிக்கும்.

அதன்படி, பிப்ரவரி மாதத்துக்கு பசுந்தேயிலைக்கு கிலோவுக்கு ரூ.18.38 நிா்ணயித்து தேயிலை வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தேயிலை தொழிற்சாலைகள் இந்த விலையை உரிய முறையில் வழங்க வேண்டும் என்றும், இதை தேயிலை வாரியம் கண்காணிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.