தும்மனட்டி ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம்: மாவட்ட ஆட்சியா் பங்கேற்பு
உதகை ஊராட்சி ஒன்றியம், தும்மனட்டி ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று 22 பயனாளிகளுக்கு ரூ. 50.15 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.










