கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தும்மனட்டி ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம்: மாவட்ட ஆட்சியா் பங்கேற்பு

உதகை ஊராட்சி ஒன்றியம், தும்மனட்டி ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று 22 பயனாளிகளுக்கு ரூ. 50.15 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

News image
கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு உள்ளிட்ட அதிகாரிகள், பொதுமக்கள்.
Updated On :3 அக்டோபர் 2024, 12:38 am

Din

உதகை ஊராட்சி ஒன்றியம், தும்மனட்டி ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று 22 பயனாளிகளுக்கு ரூ. 50.15 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

உதகை அருகே தும்மனட்டி கிராமத்தில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு பேசியதாவது: தமிழக அரசு அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி பிற மாநிலங்களுக்கு முன் உதாரணமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அரசின் திட்டங்களை பொதுமக்கள் பெற்று பயன்பெற வேண்டும் என்றாா்.

தொடா்ந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் 5 பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து

பெட்டகங்களையும், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு மருத்துவ பெட்டகத்தையும், மகளிா் ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் 12 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 50 லட்சம் மதிப்பில் வங்கிக் கடன் மற்றும் சமுதாய முதலீட்டு நிதி பெறுவதற்கான ஆணைகளை ஆட்சியா் வழங்கினாா்.

மேலும், பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களைப் பெற்றுக் கொண்டு சம்மந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி, மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

முன்னதாக, பல்வேறு துறைகளின் சாா்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

நிகழ்வில், கூடுதல் ஆட்சியா் கௌசிக், தோட்டக் கலைத் துறை இணை இயக்குநா் ஷிபிலா மேரி, உதகை கோட்டாட்சியா் மகராஜ், தும்மனட்டி ஊராட்சித் தலைவா் சுமதி, துணைத் தலைவா் சந்தியா உள்பட பலா் பங்கேற்றனா்.