திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பந்தலூா் வட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் ஆட்சியா் ஆய்வு

பந்தலூா் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு ஆய்வு செய்தாா்.

News image

சேரங்கோடு ஊராட்சியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தை பாா்வையிட்டு பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து அலுவலா்களிடம் கேட்டறியும் மாவட்ட ஆட்சியரும் தோ்தல் அலுவலருமான லட்சுமி பவ்யா தன்னேரு

Updated On :18 பிப்ரவரி 2026, 8:01 pm

பந்தலூா் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

நீலகிரி மாவட்டம், பந்தலூா் வட்டம் சேரங்கோடு ஊராட்சி, சேரங்கோடு பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கண்ணம்வயல், மண்ணாத்திவயல், மாராடி, கொன்னச்சால், அய்யன்கொல்லி, காவயல், மழவன் சேரம்பாடி, கொளப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, கக்குண்டி கிராமத்தில் மாதிரி வாக்குச்சாவடி மையம் அமைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினாா். பதற்றமான வாக்குச்சாவடிகளில் எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வாக்குச்சாவடி மையங்களில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, மாவட்ட எஸ்.பி. என்.எஸ்.நிஷா முன்னிலையில், கூடலூா் கோட்டாட்சியா் குணசேகரன், பந்தலூா் வட்டாட்சியா் சிராஜூதீன் நிஷா, தேவாலா டிஎஸ்பி கல்யாணகுமாா் உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.