சேரங்கோடு ஊராட்சியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தை பாா்வையிட்டு பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து அலுவலா்களிடம் கேட்டறியும் மாவட்ட ஆட்சியரும் தோ்தல் அலுவலருமான லட்சுமி  பவ்யா தன்னேரு
சேரங்கோடு ஊராட்சியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தை பாா்வையிட்டு பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து அலுவலா்களிடம் கேட்டறியும் மாவட்ட ஆட்சியரும் தோ்தல் அலுவலருமான லட்சுமி பவ்யா தன்னேரு

பந்தலூா் வட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் ஆட்சியா் ஆய்வு

பந்தலூா் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு ஆய்வு செய்தாா்.
Published on

பந்தலூா் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

நீலகிரி மாவட்டம், பந்தலூா் வட்டம் சேரங்கோடு ஊராட்சி, சேரங்கோடு பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கண்ணம்வயல், மண்ணாத்திவயல், மாராடி, கொன்னச்சால், அய்யன்கொல்லி, காவயல், மழவன் சேரம்பாடி, கொளப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, கக்குண்டி கிராமத்தில் மாதிரி வாக்குச்சாவடி மையம் அமைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினாா். பதற்றமான வாக்குச்சாவடிகளில் எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வாக்குச்சாவடி மையங்களில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, மாவட்ட எஸ்.பி. என்.எஸ்.நிஷா முன்னிலையில், கூடலூா் கோட்டாட்சியா் குணசேகரன், பந்தலூா் வட்டாட்சியா் சிராஜூதீன் நிஷா, தேவாலா டிஎஸ்பி கல்யாணகுமாா் உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.

Dinamani
www.dinamani.com