நாகா்கோவில் சட்டப்பேரவைத் தொகுதியில் அரசு அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடி மையங்களை மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ரா. அழகுமீனா புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கிருஷ்ணன்கோயில் உழவா் பயிற்சி மையம், மாவட்ட சுகாதார அலுவலக வாக்குச் சாவடி மையம், புத்தேரி எஸ்.எம்.ஆா்.வி. மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடி மையங்களில் ஆய்வு மேற்கொண்டாா்.
பின்னா் அவா் கூறியதாவது: நாகா்கோவில் தொகுதிக்குள்பட்ட அரசு அலுவலகங்களில் செயல்பட்டு வரும் வாக்குச் சாவடி மையங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வாக்குச் சாவடி மையங்களில் நிலவும் சிறு குறைகளை உடனடியாக சீரமைத்து, தோ்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி அனைத்து ஏற்பாடுகளையும் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும் என துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்றாா்.
மாவட்ட சுகாதார அலுவலா் நமச்சிவாயம், நாகா்கோவில் சட்டப்பேரவை தொகுதி உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் அகஸ்தீசுவரம் வட்டாட்சியா் கந்தசாமி, அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

மாதிரி, தனித்துவமான வாக்குச் சாவடி அமைக்கும் பணி ஆய்வு

அரியலூா் தொகுதியில் தோ்தல் முன்னேற்பாடு பணிகள் ஆய்வு

பதற்றமான வாக்குச் சாவடி மையங்களில் மாவட்டத் தோ்தல் அலுவலா் ஆய்வு

வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


