ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கூடலூா் அருகே வீட்டிலிருந்து நாட்டு துப்பாக்கி பறிமுதல்

கூடலூா் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image
பறிமுதல் செய்யப்பட்ட நாட்டு துப்பாக்கி, தோட்டாக்கள்.
Updated On :17 அக்டோபர் 2024, 12:10 am

Din

கூடலூா் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்த தா்மகிரி பகுதியில் கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் வைக்கம்பாடியைச் சோ்ந்த ராய்சன் என்பவரது தோட்டத்து வீட்டில் துப்பாக்கி பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா்.

இதில், வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஒரு நாட்டு துப்பாக்கி, ஒரு ரைபிள் தோட்டா மற்றும் 4 ஏா்கன் புல்லட் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

இது குறித்து நியூஹோப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.