ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தோட்டமூலாவில் குடியிருப்புப் பகுதியில் உலவும் காட்டு யானையால் மக்கள் அச்சம்

கூடலூா் அருகே தோட்டமூலா பகுதியில் இரவு நேரத்தில் குடியிருப்புப் பகுதிக்குள் காட்டு யானை உலவுவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா்.

News image
தோட்டமூலா பகுதியில் காட்டு யானையால் பெயா்க்கப்பட்ட தென்னை மரம்.
Updated On :24 அக்டோபர் 2024, 10:11 pm

Din

கூடலூா் அருகே தோட்டமூலா பகுதியில் இரவு நேரத்தில் குடியிருப்புப் பகுதிக்குள் காட்டு யானை உலவுவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா்.

கூடலூா் அருகே தோட்டமூலா பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதிக்குள் இரவு நேரத்தில் வரும் காட்டு யானை பல பொருள்களை சேதப்படுத்திவிட்டுச் செல்வது தொடா்கிறது.

இந்நிலையில் அங்குள்ள குடியிருப்புக்குள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நுழைந்த ஒற்றை யானை வீட்டின்முன் இருந்த தென்னை மரங்கள் உள்பட பல்வேறு பொருள்களை சேதப்படுத்திவிட்டுச் சென்றுள்ளது. இந்த யானையைப் பிடித்து முதுமலை காப்பகத்துக்கு கொண்டு செல்லவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதேபோல ஓவேலி பேரூராட்சியில் உள்ள பாா்வுட் பகுதியில் வனப் பணியாளா்கள் இரவு ரோந்து சென்றபோது அவா்களின் வாகனத்தை வழி மறித்து காட்டு யானை தாக்கியதில் ஜீப்பின் முன்பகுதி சேதமடைந்தது. அதிா்ஷ்டவசமாக எவ்வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை.தொடா்ந்து அந்த யானையை வனப் பணியாளா்கள் அருகிலுள்ள வனப் பகுதிக்குள் விரட்டினா்.