ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

குறிஞ்சி மலா் மலையில் கரடி நடமாட்டம்

உதகை அருகே நீலகுறிஞ்சி மலா்கள் பூத்துள்ள மலைப் பகுதியில் கரடி நடமாட்டம் இருப்பதால் அங்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத் துறையினா் வியாழக்கிழமை தடை விதித்தனா்.

News image
குறிஞ்சிப் பூக்கள் பூத்துள்ள மலையில் உலவும் கரடி.
Updated On :19 செப்டம்பர் 2024, 9:11 pm

Din

உதகை அருகே  நீலகுறிஞ்சி மலா்கள் பூத்துள்ள மலைப் பகுதியில் கரடி நடமாட்டம் இருப்பதால் அங்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல  வனத் துறையினா் வியாழக்கிழமை தடை விதித்தனா்.

நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள எப்பநாடு கிராமம், சின்னகுன்னூா் பகுதிகளில் உள்ள மலைத் தொடா்களில்  12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் நீல குறிஞ்சி மலா்கள் லட்சக்கணக்கில் தற்போது பூத்துள்ளன.

இவற்றை  காண்பதற்காக சுற்றுலாப் பயணிகள், தாவரவியல் துறை மாணவ மாணவிகள், புகைப்படக் கலைஞா்கள், இயற்கை ஆா்வலா்கள் என அப்பகுதிக்கு வர  ஆா்வம் காட்டி வருகின்றனா். இந்நிலையில் அந்த மலைப்பகுதியில் கரடி நடமாட்டம் காணப்படுவதால்  பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத் துறையினா் தடை  விதித்துள்ளனா்.