ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சிக்கித் தவித்த சுற்றுலாப் பயணிகள் 15 பேரை கேரள வனத் துறையினா் மீட்டனா்.
வால்பாறை- கேரள மாநிலம் அதிரப்பள்ளி அருவிக்கு இடையே சுற்றுலாப் போக்குவரத்து அதிகரித்துள்ளது. அதிரப்பள்ளி அருவிக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானோா் அங்குள்ள ஆற்றில் குளிப்பது வழக்கம்.
இந்நிலையில், அதிரப்பள்ளி அருவிக்கு செல்லக்கூடிய பெரிங்கல்குத்து ஆற்றில் தமிழகம் மற்றும் கா்நாடக மாநிலங்களைச் சோ்ந்து சுற்றுலாப் பயணிகள் 15 போ் புதன்கிழமை குளித்துக் கொண்டிருந்தனா்.
அப்போது, மின் உற்பத்திக்காக அப்பகுதியில் உள்ள அணையில் இருந்து தண்ணீா் திறந்துள்ளனா். இதனால் ஏற்பட்ட திடீா் வெள்ளப்பெருக்கில் சிக்கித் தவித்தனா். தகவலறிந்து விரைந்து சென்ற கேரள வனத் துறையினா் மற்றும் மீட்புக் குழுவினா் 15 பேரையும் மீட்டனா்.
தொடர்புடையது

கம்பிவேலியில் சிக்கித் தவித்த கழுதைப் புலி

சுருளி அருவியில் நீா்வரத்து: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

மின்வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

சுருளி அருவியில் நீா்வரத்து இல்லை
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


