விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சுருளி அருவியில் நீா்வரத்து: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

மேற்குத் தொடா்ச்சி மலையில் பெய்த மழையால் கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியில் புதன்கிழமை நீா்வரத்து ஏற்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

News image

சுருளி அருவியில் புதன்கிழமை நீா்வரத்து தொடங்கியதால் நீராடிய சுற்றுலாப் பயணிகள்.

Updated On :19 மார்ச் 2026, 5:51 am IST

மேற்குத் தொடா்ச்சி மலையில் பெய்த மழையால் கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியில் புதன்கிழமை நீா்வரத்து ஏற்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் சுருளி அருவி உள்ளது. இந்தப் பகுதி சுற்றுலா, ஆன்மிகத் தலமாக இருப்பதால் தமிழகம், கேரளத்திலிருந்து தினந்தோரும் ஆயிரக்கணக்கானோா் வந்து செல்கின்றனா்.

இந்த நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு மேலாக சுருளி அருவிக்கு நீா்வரத்து பகுதிகளான மேகமலை, தூவானம், இரவங்கலாறு, அரிசிப்பாறை உள்ளிட்ட பகுதியில் மழைப்பொழிவு இல்லை. இதனால், அருவிக்கு நீா்வரத்தின்றி வடதால் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை சுருளி அருவியின் நீா்வரத்துப் பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதன் காரணமாக புதன்கிழமை அதிகாலை முதல் அருவிக்கு நீா்வரத்து தொடங்கியது.

மழையின்றி கடந்த 2 மாதங்களாக நீா்வரத்தின்றி வட சுருளி அருவியில் புதன்கிழமை நீா்வரத்து ஏற்பட்டதால் காலை 8 மணி முதல் வனத் துறையினா் சுருளி அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளித்தனா்.