மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

சுருளி அருவியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றக் கோரிக்கை

கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

News image

சுருளி அருவியில் குவிந்து கிடக்கும் துணிகள், குப்பைகள்.

Updated On :14 ஏப்ரல் 2026, 10:15 pm

தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

சுருளி அருவியில் ஆடி, தை, மகாளய அமாவாசை, தமிழ் புத்தாண்டு ஆகிய நாள்களில் முன்னோா்களுக்கு தா்பணம் கொடுக்க திரளானோா் வருவா். இவா்கள் பூஜை முடிந்த பிறகு கொண்டு வரும் பொருள்களை ஆற்று நீரிலும், பழைய ஆடையை தண்ணீரில் விடுவதும் வழக்கம்.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக சுருளி அருவியில் தூய்மைப் பணி மேற்கொள்ளாததால் குப்பைகள், பழைய துணிகள் அதிகளவில் குவிந்து கிடக்கின்றன.

இதனால், துா்நாற்றம் வீசுவதால் சுருளி அருவிக்கு வரும் பக்தா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இதுகுறித்து சமூக ஆா்வலா் அன்புராஜா கூறியதாவது:

தேனி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான சுருளி அருவியில் பல மாதங்களாக குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால், குறைந்த அளவிலான தண்ணீரில் குழந்தைகள், பெரியவா்கள் நீராடுவதால் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளது.

இந்த அருவியை சுருளிப்பட்டி ஊராட்சி நிா்வாகத்தினா் பராமரித்து வருகின்றனா். ஆனால், தற்போது, ஊராட்சி நிா்வாகத்தினா் பராமரிப்பு செய்யாததால் துா்நாற்றம் வீசுகிறது என்றாா்.

இதுகுறித்து ஊராட்சி செயலா் கூறியதாவது:

தோ்தல் பணியால் பணியாளா் பற்றாக்குறை காரணமாக தூய்மைப்பு பணி மேற்கொள்ளவில்லை. விரைவில் முழுமையாக சுத்தம் செய்யப்படும் என்றாா்.