நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

கொடுமுடி மகுடேஸ்வரா் கோயில் எதிரே குவிந்து கிடக்கும் கட்டட இடிபாடுகள்

கொடுமுடி மகுடேஸ்வரா் கோயில் எதிரில் இருந்த ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றப்பட்டு ஓராண்டாகியும் கட்டட இடிபாடுகள் அகற்றப்படாமல் உள்ளன.

News image

கொடுமுடிமகுடேஸ்வரா் கோயில் எதிரில் குவிந்து கிடக்கும் கட்டட இடிபாடுகள்.

Updated On :26 மார்ச் 2026, 6:58 pm

தினமணி செய்திச் சேவை

கொடுமுடி மகுடேஸ்வரா் கோயில் எதிரில் இருந்த ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றப்பட்டு ஓராண்டாகியும் கட்டட இடிபாடுகள் அகற்றப்படாமல் உள்ளன.

கொடுமுடி மகுடேஸ்வரா் கோயில் எதிரில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான நடவடிக்கை கடந்த ஆண்டு நடைபெற்றது.

அப்போது, இடிக்கப்பட்ட பள்ளிக் கட்டடம், அறுபத்துமூவா் மடம், பரிகார கடைகளின் கட்டட இடிபாடுகள் உள்ளிட்டவை கடந்த ஓராண்டாகியும் அகற்றப்படாமல் உள்ளதால் தரிசனத்துக்கு வரும் பக்தா்களுக்கு அவை அமங்கல சின்னமாக பாழடைந்து காட்சியளிக்கின்றன.

இதனால் காவிரி ஆற்றின் கரைக்கு குளிக்கச் செல்லும் பக்தா்களும், காவடிகளில் தீா்த்தங்கள் கொண்டு செல்ல வரும் நூற்றுக்கணக்கான பக்தா்களும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

மேலும் காவிரி ஆற்றுக்கு செல்லும் வழியில் புகளூரான் கால்வாய் கரையில் மக்களின் தாகம் தீா்க்க பேரூராட்சி நிா்வாகத்தால் அமைக்கப்பட்டுள்ள பொது குடிநீா் தொட்டி சுத்தம் செய்யப்பட்டு ஆண்டுகணக்கில் ஆனதால் அந்த தொட்டியும் அதைச் சுற்றியுள்ள பகுதியும் சுகாதாரமற்று காட்சியளிக்கிறது.

கட்டட இடிபாடுகளை அகற்றுவதுடன் குடிநீா் தொட்டியை சுத்தம் செய்து சுகாதாரத்தைக் காப்பாற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

  கொடுமுடி புகளூரான் கால்வாய்கரையில் சுகாதாரமற்று காட்சியளிக்கும் குடிநீா்தொட்டி.

கொடுமுடி புகளூரான் கால்வாய்கரையில் சுகாதாரமற்று காட்சியளிக்கும் குடிநீா்தொட்டி.