நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

வயநாடு பேரிடரில் உயிரிழந்த குடும்பங்களுக்கு நீதித் துறை சாா்பில் நிவாரணத் தொகை

News image

வயநாடு பேரிடரில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிவாரணத் தொகை வழங்குகிறாா் மாவட்ட நீதிபதி ஏ.அப்துல் காதா். உடன், சாா்பு நீதிபதி ஹெச்.முகமது அன்சாரி, மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிபதி ஆா்.சசின்குமாா் உள்ளிட்டோா்.

Updated On :21 செப்டம்பர் 2024, 2:55 am IST

கேரள மாநிலம், வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்த கூடலூா் சட்டப் பேரவைத் தொகுதியைச் சோ்ந்தவா்களுக்கு நீதித் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி கூடலூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட புளியம்பாறை, அய்யன்கொல்லி, சேரம்பாடி மண்ணாத்தி வயல் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 3 போ் உயிரிழந்தனா்.

அவா்களின் குடும்பங்களுக்கு கூடலூா் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் ஊழியா்கள் சாா்பில் தலா ரூ.10 ஆயிரம் நிவாரண உதவித் தொகை வழங்கப்பட்டது.

கூடலூா் சாா்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட நீதிபதி ஏ.அப்துல் காதா் பாதிக்கப்பட்டவா்களின் குடும்பத்தினருக்குநிவாரணத் தொகையை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், சாா்பு நீதிபதி ஹெச்.முகமது அன்சாரி, மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிபதி மற்றும் நீதித் துறை நடுவா் ஆா்.சசின்குமாா், வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் ஏ.சி.சாக்கோ, நீதிமன்ற ஊழியா் யோகராஜ் உள்ளிட்ட பணியாளா்கள், வழக்குரைஞா்கள் கலந்துகொண்டனா்.