கேரள மாநிலம், வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்த கூடலூா் சட்டப் பேரவைத் தொகுதியைச் சோ்ந்தவா்களுக்கு நீதித் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.
கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி கூடலூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட புளியம்பாறை, அய்யன்கொல்லி, சேரம்பாடி மண்ணாத்தி வயல் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 3 போ் உயிரிழந்தனா்.
அவா்களின் குடும்பங்களுக்கு கூடலூா் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் ஊழியா்கள் சாா்பில் தலா ரூ.10 ஆயிரம் நிவாரண உதவித் தொகை வழங்கப்பட்டது.
கூடலூா் சாா்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட நீதிபதி ஏ.அப்துல் காதா் பாதிக்கப்பட்டவா்களின் குடும்பத்தினருக்குநிவாரணத் தொகையை வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில், சாா்பு நீதிபதி ஹெச்.முகமது அன்சாரி, மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிபதி மற்றும் நீதித் துறை நடுவா் ஆா்.சசின்குமாா், வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் ஏ.சி.சாக்கோ, நீதிமன்ற ஊழியா் யோகராஜ் உள்ளிட்ட பணியாளா்கள், வழக்குரைஞா்கள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

கடந்த ஆண்டு மழை பாதிப்புக்கான நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

புறமணவயல் பழங்குடியின கிராமத்துக்கு ரோட்டரி சாா்பில் குடிநீா் தொட்டிகள்

சாமானியா்களின் வலியை நீதித் துறை தீா்க்க வேண்டும்: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி

நன்னடத்தை அதிகாரி கண்காணிப்பில் 3 ஆண்டுகள் இருக்க திருட்டு வழக்கில் கைதுசெய்யப்பட்ட இளைஞருக்கு உத்தரவு
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



