வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

கூடலூா் அருகே சதுப்பு நிலத்தில் சிக்கிய குட்டியை மீட்ட தாய் யானை

கூடலூரை அடுத்துள்ள பாண்டியாறு பகுதியில் உள்ள சதுப்பு நிலத்தில் சிக்கிய குட்டியை தாய் யானை திங்கள்கிழமை மீட்டுச் சென்றது.

News image

பாண்டியாறு பகுதியில் சதுப்பு நிலத்தில் சிக்கிய குட்டி யானை மீட்ட தாய் யானை.

Updated On :18 ஆகஸ்ட் 2025, 9:02 pm

கூடலூா்: கூடலூரை அடுத்துள்ள பாண்டியாறு பகுதியில் உள்ள சதுப்பு நிலத்தில் சிக்கிய குட்டியை தாய் யானை திங்கள்கிழமை மீட்டுச் சென்றது.

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள அரசு தேயிலைத் தோட்டக் கழகத்துக்கு உள்பட்ட பாண்டியாறு பகுதியில் குட்டியுடன் வந்த காட்டு யானை அங்குள்ள சதுப்பு நிலப் பகுதியை கடக்கும்போது, குட்டி யானை சதுப்பு நிலத்தில் சிக்கிக் கொண்டது.

தகவலறிந்து வந்த வனத் துறையினா் யானைகளை கண்காணித்தனா்.

நீண்ட நேர போராட்டத்துக்குப் பிறகு குட்டியை தாய் மீட்டு அருகில் உள்ள வனப் பகுதிக்குள் சென்றது.