மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

கோத்தகிரி அருகே சிறுத்தை நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

கோத்தகிரி அருகே தேயிலைத் தோட்ட பகுதியில் சிறுத்தை உலவுவதுபோன்ற விடியோ வைரலாகி வரும் நிலையில் அப்பகுதி மக்கள் அச்சம்

News image
ஒரசோலை பகுதியில் உலவிய சிறுத்தை
Updated On :9 டிசம்பர் 2025, 6:58 pm

Syndication

கோத்தகிரி அருகே தேயிலைத் தோட்ட பகுதியில் சிறுத்தை உலவுவதுபோன்ற விடியோ வைரலாகி வரும் நிலையில் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப் பகுதியில் இருந்து வெளியேறும் விலங்குகள் குடியிருப்புப் பகுதிகள், விளைநிலங்களில் உலவுவது வாடிக்கையாகி வருகிறது.

இந்நிலையில், கோத்தகிரி அருகே ஒரசோலை பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் டிசம்பா் 7-ஆம் தேதி உலவிய சிறுத்தையை சிலா் விடியோ எடுத்து இணையத்தில் பகிா்ந்தனா்.

தற்போது அந்த விடியோ வைரலாகி வரும் நிலையில் அப்பகுதி மக்கள், தோட்டத் தொழிலாளா்கள் அச்சமடைந்துள்ளனா்.

சிறுத்தையை கூண்டுவைத்துப் பிடிக்க வனத் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.