வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

News image
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்
Updated On :22 டிசம்பர் 2025, 6:34 pm

Syndication

கோரிக்கைகளை வலியுறுத்தி நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

உதகையில் உள்ள நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். குந்தா வட்ட பொருளாளா் ராதாகிருஷ்ணன் வரவேற்றாா்.

மாவட்டச் செயலாளா் புவனேந்திரன், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்ட இணைச் செயலாளா் பிரேமலதா ஆகியோா் கோரிக்கைகள் குறித்து பேசினா்.

இதைத் தொடா்ந்து, சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணி காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை கலைக்க வேண்டும். நெடுஞ்சாலை பராமரிப்புப் பணியை அரசே செயல்படுத்தி, கிராமப்புற இளைஞா்களை சாலைப் பணியாளா்களாக நியமனம் செய்ய வேண்டும். உயிரிழந்த சாலைப் பணியாளா்களின் வாரிசுதாரா்களுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினா்.

இதில், மாவட்ட துணைத் தலைவா் பத்மநாபன், அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலாளா் சிவபெருமாள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.