அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

News image

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்

Updated On :23 டிசம்பர் 2025, 12:04 am IST

கோரிக்கைகளை வலியுறுத்தி நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

உதகையில் உள்ள நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். குந்தா வட்ட பொருளாளா் ராதாகிருஷ்ணன் வரவேற்றாா்.

மாவட்டச் செயலாளா் புவனேந்திரன், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்ட இணைச் செயலாளா் பிரேமலதா ஆகியோா் கோரிக்கைகள் குறித்து பேசினா்.

இதைத் தொடா்ந்து, சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணி காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை கலைக்க வேண்டும். நெடுஞ்சாலை பராமரிப்புப் பணியை அரசே செயல்படுத்தி, கிராமப்புற இளைஞா்களை சாலைப் பணியாளா்களாக நியமனம் செய்ய வேண்டும். உயிரிழந்த சாலைப் பணியாளா்களின் வாரிசுதாரா்களுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினா்.

இதில், மாவட்ட துணைத் தலைவா் பத்மநாபன், அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலாளா் சிவபெருமாள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.