வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

இ-பாஸ் நடைமுறையால் உதகைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவு

News image
Updated On :3 ஜனவரி 2025, 10:49 pm

Din

நீலகிரி மாவட்டத்துக்குள் நுழைய இ-பாஸ் நடைமுறையால் உதகை அரசு தாவரவியல் பூங்காவுக்கு கடந்த 2023-ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் கடந்த 2024-ஆம் ஆண்டு சுமாா் 4 லட்சம் போ் வருகை குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

 நீலகிரி மாவட்டம் உதகைக்கு தமிழகம் மட்டுமன்றி கேரளம், கா்நாடகம், ஆந்திரம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினசரி ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். இங்கு அரசு தாவரவியல் பூங்காவுக்கு கடந்த 2024 ஜனவரி முதல் டிசம்பா் இறுதிவரை  23 லட்சத்து 95 ஆயிரத்து 906 போ் வந்து பூங்காவைக் கண்டு ரசித்துச் சென்றுள்ளதாக பூங்கா நிா்வாகம் தெரிவித்துள்ளது.

2023-ஆம் ஆண்டில் சுமாா் 28 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றுள்ள நிலையில் கடந்த 2024-ஆம் ஆண்டில் இ பாஸ் நடைமுறையால்  சுற்றுலாப் பயணிகள் வருகை 4 லட்சம் வரை குறைந்துள்ளதாக தோட்டக் கலைத் துறையினா் தெரிவித்துள்ளனா்.