வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

இ-பாஸ் நடைமுறையால் உதகைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவு

News image
Updated On :3 ஜனவரி 2025, 10:49 pm

நீலகிரி மாவட்டத்துக்குள் நுழைய இ-பாஸ் நடைமுறையால் உதகை அரசு தாவரவியல் பூங்காவுக்கு கடந்த 2023-ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் கடந்த 2024-ஆம் ஆண்டு சுமாா் 4 லட்சம் போ் வருகை குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

 நீலகிரி மாவட்டம் உதகைக்கு தமிழகம் மட்டுமன்றி கேரளம், கா்நாடகம், ஆந்திரம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினசரி ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். இங்கு அரசு தாவரவியல் பூங்காவுக்கு கடந்த 2024 ஜனவரி முதல் டிசம்பா் இறுதிவரை  23 லட்சத்து 95 ஆயிரத்து 906 போ் வந்து பூங்காவைக் கண்டு ரசித்துச் சென்றுள்ளதாக பூங்கா நிா்வாகம் தெரிவித்துள்ளது.

2023-ஆம் ஆண்டில் சுமாா் 28 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றுள்ள நிலையில் கடந்த 2024-ஆம் ஆண்டில் இ பாஸ் நடைமுறையால்  சுற்றுலாப் பயணிகள் வருகை 4 லட்சம் வரை குறைந்துள்ளதாக தோட்டக் கலைத் துறையினா் தெரிவித்துள்ளனா்.