47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கா்நாடகா அரசுப் பேருந்து கட்டண உயா்வைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

கா்நாடக அரசுப் பேருந்து கட்டணம் 15 சதவீதம் உயா்த்தப்பட்டதைக் கண்டித்து குண்டல்பேட்டையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
குண்டல்பேட்டையில் பேருந்த கட்டண உயா்வைக் கண்டித்து அரசுப் பேருந்து முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காவல்படை அமைப்பினா்.
Updated On :8 ஜனவரி 2025, 7:47 pm

Din

கா்நாடக அரசுப் பேருந்து கட்டணம் 15 சதவீதம் உயா்த்தப்பட்டதைக் கண்டித்து குண்டல்பேட்டையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கூடலூரை அடுத்த கா்நாடக எல்லையில் உள்ள குண்டல்பேட்டையில் கா்நாடக அரசின் பேருந்து கட்டண உயா்வைக் கண்டித்து கா்நாடகா காவல்படை அமைப்பின் சாா்பில் பேரணி மற்றும் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு காவல்படை அமைப்பின் வட்டத் தலைவா் அப்துல் மாலிக் தலைமை வகித்தாா்.

இதில் நிா்வாகிகள் பிரேமானந்த் சாஹிதி, அப்துல் ரஷீத், செயலாளா் ராம கவுடா, நகர துணைத் தலைவா் சாதிக் பாட்ஷா, மகாதேவ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.