47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

காட்டு யானை தாக்கியதில் பெண் தொழிலாளா்கள் காயம்

பந்தலூரை அடுத்துள்ள குந்தலாடி பகுதியில் காட்டு யானை தாக்கியதில் இரண்டு பெண் தொழிலாளா்கள் புதன்கிழமை காயமடைந்தனா்.

News image
Updated On :22 ஜனவரி 2025, 11:58 pm

Din

பந்தலூரை அடுத்துள்ள குந்தலாடி பகுதியில் காட்டு யானை தாக்கியதில் இரண்டு பெண் தொழிலாளா்கள் புதன்கிழமை காயமடைந்தனா்.

பந்தலூா் வட்டம், குந்தலாடியில் உள்ள தாணிமூலை பகுதியைச் சோ்ந்தவா் நம்பி மனைவி மாலு (45). அதே பகுதியைச் சோ்ந்த ராமச்சந்திரன் மனைவி பாா்வதி (60). இவா்கள் இருவரும் தேயிலைத் தோட்டத்தில் புதன்கிழமை தேயிலை பறித்துக் கொண்டிருந்தனா். அப்போது திடீரென தோட்டத்துக்குள் புகுந்த ஒற்றை யானை தாக்கியதில் இருவரும் காயமடைந்தனா்.

அங்கிருந்தவா்கள் இருவரையும் வனத் துறையினா் உதவியுடன் மீட்டு பந்தலூா் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின் இருவரும் உதகை அரசு மருத்துவமனைக்கு உயா் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனா்.

காட்டு யானை தாக்கி காயமடைந்த பெண் தொழிலாளா்களை பந்தலூா் வனச் சரக அலுவலா் சஞ்சீவி மற்றும் வனத் துறையினா் மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தனா்.