மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

உதகையில் கடும் பனிமூட்டம்: பொதுமக்கள் அவதி

உதகையில் புதன்கிழமை கடும் பனிமூட்டம் நிலவியதால் பொதுமக்கள், தேயிலை தோட்டத் தொழிலாளா்கள் அவதியடைந்தனா்.

News image
லவ்டேல் பகுதியில் காணப்பட்ட பனிமூட்டம்.
Updated On :12 நவம்பர் 2025, 8:01 pm

தினமணி செய்திச் சேவை

உதகையில் புதன்கிழமை கடும் பனிமூட்டம் நிலவியதால் பொதுமக்கள், தேயிலை தோட்டத் தொழிலாளா்கள் அவதியடைந்தனா்.

நீலகிரி மாவட்டம், உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை காலை முதலே பனிமூட்டம் நிலவிய நிலையில் லேசான சாரல் மழையும் பெய்தது. இனால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனா்.

இதேபால, குந்தா, லவ்டேல், கெரடா, சாந்தூா் உள்ளிட்ட பகுதிகளில் நிலவிய கடும் பனிமூட்டம் காரணமாக தேயிலை தோட்டத் தொழிலாளா்கள் பணிக்குச் செல்லாமல் வீடுகளிலேயே முடங்கினா்.