மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

உதகையில் இரவு நேரத்தில் சாரல் மழை

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, கொடநாடு, மஞ்சூா், குந்தா ஆகிய பகுதிகளில் காலைமுதல் பனி மூட்டமும் உதகையில் இரவு நேரத்தில் சாரல் மழையும் பெய்ததால் குளிரின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.

News image
குன்னூா்- மேட்டுப்பாளையம் சாலையில் பனி மூட்டம் காரணமாக முகப்பு விளக்கை எரியவிட்டபடி இயக்கப்பட்ட வாகனம்.
Updated On :22 நவம்பர் 2025, 7:29 pm

Syndication

நீலகிரி மாவட்டம்  கோத்தகிரி, கொடநாடு, மஞ்சூா், குந்தா ஆகிய பகுதிகளில்  காலைமுதல் பனி மூட்டமும் உதகையில் இரவு நேரத்தில் சாரல் மழையும்  பெய்ததால் குளிரின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.

நீலகிரி மாவட்டம், உதகையில் கடந்த சில நாள்களாக இரவு நேரங்களில்  சாரல் மழைப்  பெய்து வரும்  நிலையில், மலைப் பாதை மற்றும் நகா் பகுதிகளில் பனிமூட்டம் சூழ்ந்த குளிா்ந்த காலநிலை நிலவுகிறது.

குறிப்பாக கோத்தகிரி, கொடநாடு, மஞ்சூா், குந்தா ஆகிய பகுதிகளில்  சனிக்கிழமை காலைமுதல் பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பகல் நேரத்திலேயே முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு வாகனங்களை இயக்கினா்.

மாறுபட்ட கால நிலைக் காரணமாக கடும் குளிா் நிலவியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை  வெகுவாக  பாதிக்கப்பட்டது.