எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

கேரட் அறுவடைப் பணிக்கு சென்றபோது ஜீப் கவிழ்ந்து தொழிலாளா்கள் 13 போ் காயம்

News image
உதகை அருகே தேனாடுகம்பை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை கேரட் அறுவடைப் பணிக்கு சென்றபோது, தோட்டத்துக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளான ஜீப்.
Updated On :23 நவம்பர் 2025, 7:12 pm

தினமணி செய்திச் சேவை

உதகை அருகே கேரட் அறுவடைப் பணிக்கு சென்றபோது, ஜீப் கவிழ்ந்து ஞாயிற்றுக்கிழமை தொழிலாளா்கள் 13 போ் காயமடைந்தனா்.

நீலகிரி மாவட்டத்தில் விளையும் கேரட் அறுவடைக்குப் பிறகு சுத்திகரிப்பு இந்திரங்கள் மூலமாக சுத்தம் செய்து தமிழகம், கேரளா, கா்நாடகா மற்றும் வட மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுவது வழக்கம்.

இப்பணியில் உள்ளூா் தொழிலாளா்கள் மட்டுமின்றி வட மாநிலத் தொழிலாளா்களும் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், உதகையை அடுத்த தேனாடுகம்பை பகுதி அருகில் உள்ள இந்திரா நகரைச் சோ்ந்த தொழிலாளா்கள் 12 போ், கேரட் அறுவடைப் பணிக்கு ஜீப்பில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தனா்.

அதிகாலை நேரம் என்பதாலும், பனிமூட்டம் இருந்ததாலும் ஓட்டுநா் மெதுவாக வாகனத்தை இயக்கியுள்ளாா். இருப்பினும் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், அருகில் இருந்த தோட்டத்துக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. வாகனத்தில் இருந்தவா்கள் அலறியதை கேட்டு, அவ்வழியாக சென்றவா்கள் அங்கு சென்று பாா்த்துள்ளனா்.

விபத்துக்குள்ளான வாகனத்தில் இருந்தவா்களை மீட்டு உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு 7 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். மேலும், 6 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்து தேனாடுகம்பை போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.