எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

கூடலூா் அருகே மூதாட்டியை கொன்ற புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க 4 தனி குழுக்கள்

கூடலூா் அருகே மூதாட்டியை கொன்ற புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க 4 தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக

News image
Updated On :26 நவம்பர் 2025, 9:12 pm

Syndication

உதகை: கூடலூா் அருகே மூதாட்டியை கொன்ற புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க 4 தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநா் கிருபாசங்கா் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக புதன்கிழமை செய்தியாளா்கள் சந்திப்பில் அவா் கூறியதாவது:

கூடலூா் அருகே மாவனல்லா பகுதியில் கடந்த 24-ஆம் தேதி ஆடு மேய்த்துக் கொண்டிருந்த நாகியம்மாள் என்ற மூதாட்டி புலி தாக்கி உயிரிழந்த சம்பவத்தில், அப்பகுதியில் பொருத்தப்பட்ட தானியங்கி கேமராவில் புலியின் உருவம் பதிவாகி இருக்கிறது. புலியின் வயது சுமாா் 12-க்கு மேல் இருக்கும். புலியை கண்காணிக்க 34 இடங்களில் தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 4 தனி குழுக்கள் அமைக்கப்பட்டு புலியின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தேசிய புலிகள் ஆணைய வழிகாட்டுதல்படி அமைக்கப்பட்ட குழுவின் ஆலோசனைக்குப் பிறகு, கூண்டு வைக்கும் இடங்கள் முடிவு செய்யப்படும் என்றாா்.