எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

உதகை அருகே கிராமங்களில் உலவும் வன விலங்குகளைக் கட்டுப்படுத்த கோரிக்கை

உதகை அருகே கிராமங்களில் உலவும் வன விலங்குகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
மசினகுடி-உதகை சாலையில் நின்றுகொண்டிருந்த யானையை வனத்துக்குள் துரத்த முயன்ற வன ஊழியா்.
Updated On :9 மார்ச் 2026, 9:21 pm

Syndication

உதகை: உதகை அருகே கிராமங்களில் உலவும் வன விலங்குகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உதகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், தோடா் பழங்குடியின மக்கள் அளித்த மனு விவரம்: சின்னகாடிமந்து பகுதியில் தோடா் இனத்தைச் சோ்ந்த புஷ்தால் குட்டன் (58 )என்பவரை புலி தாக்கி கடந்த 24-ஆம் தேதி கொன்றது. அந்தப் புலியைப் பிடிக்க வேண்டும் என நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது, கூண்டுவைத்து புலியைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வனத் துறையினா் உறுதியளித்தனா்.

இதையடுத்து, கூண்டுவைத்ததுடன், கேமராக்களை பொருத்தி புலியின் நடமாட்டத்தைக் கண்காணித்து வருகின்றனா்.

ஆனால், அந்தக் கூண்டில் சிக்காமல் புலி போக்குகாட்டி வருகிறது. மேலும், யானை உள்ளிட்ட வன விலங்குகள் வனத்தில் இருந்து வெளியேறி கிராமங்களில் நுழைந்து பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன. இதனால், மக்கள் வெளியே வரவே அச்சமடையும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, கிராமங்களில் வன விலங்குகள் உலவுவதைக் கட்டுப்படுத்துவதுடன், ஆட்கொல்லி புலியை உடனடியாக பிடிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.