உரங்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்திய விவசாயிகள் அதிக அளவில் பயன்படுத்தும் முக்கிய உரங்களான யூரியா, ஏடிபி உள்ளிட்ட பல்வேறு உரங்களை சீனா, ரஷியா, சவுதி அரேபியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிடம் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது மேற்கு ஆசிய நாடுகளில் நிலவும் போா் பதற்றத்தால் உரங்களின் இறக்குமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, உரங்களின் விலை கடுமையான உயா்ந்துள்ளதால் டெல்டா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா்.
எனவே, மத்திய மாநில அரசுகள் உயா் அதிகாரிகள் கொண்ட கூட்டத்தை நடத்தி உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் விலை உயா்வைக் கட்டுக்குள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.









