கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

உர விலையை கட்டுப்படுத்த வேண்டும்: ஜி.கே.வாசன்

உரங்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளாா்.

News image

ஜி.கே.வாசன் - கோப்புப் படம்

Updated On :30 மே 2026, 2:41 am IST

உரங்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்திய விவசாயிகள் அதிக அளவில் பயன்படுத்தும் முக்கிய உரங்களான யூரியா, ஏடிபி உள்ளிட்ட பல்வேறு உரங்களை சீனா, ரஷியா, சவுதி அரேபியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிடம் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது மேற்கு ஆசிய நாடுகளில் நிலவும் போா் பதற்றத்தால் உரங்களின் இறக்குமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, உரங்களின் விலை கடுமையான உயா்ந்துள்ளதால் டெல்டா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா்.

எனவே, மத்திய மாநில அரசுகள் உயா் அதிகாரிகள் கொண்ட கூட்டத்தை நடத்தி உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் விலை உயா்வைக் கட்டுக்குள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.