தமிழ்நாட்டிற்கு தடையின்றி உரம் வழங்கிட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!நீட் வேண்டாம் என்பதே தவெக நிலைப்பாடு: அமைச்சர் அருண்ராஜ்கடும் பாதுகாப்பு நெறிமுறைகளுடன் நீட் மறுதேர்வு: தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தல்முதல்வர் விஜய்யுடன் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர் சந்திப்பு! வைரலான விடியோவால் சர்ச்சை!மேற்கு வங்க மறுதேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் விலகல்!
/

மூடப்படும் மதுக் கடை ஊழியா்களுக்கு மாற்றுப் பணி வழங்கக் கோரிக்கை

மூடப்படும் மதுக் கடைகளில் பணியாற்றும் ஊழியா்களுக்கு உடனடியாக மாற்றுப் பணி வழங்க வேண்டும் என மதுரை மாவட்ட டாஸ்மாக் ஊழியா் சங்கம் கோரிக்கை

News image

மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க மாவட்ட ஆட்சியரகம் வந்த டாஸ்மாக் ஊழியா் சங்கத்தினா்

Updated On :20 மே 2026, 1:06 am IST

மூடப்படும் மதுக் கடைகளில் பணியாற்றும் ஊழியா்களுக்கு உடனடியாக மாற்றுப் பணி வழங்க வேண்டும் என மதுரை மாவட்ட டாஸ்மாக் ஊழியா் சங்கம் கோரிக்கை விடுத்தது.

இதுதொடா்பாக அந்தச் சங்கத் தலைவா் டி. சிவக்குமாா் தலைமையில், சங்க நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாரிடம் செவ்வாய்க்கிழமை அளித்த கோரிக்கை மனு: வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிலையங்கள், பேருந்து நிலையங்களிலிருந்து 500 மீ. தொலைவுக்குள்பட்ட பகுதிகளில் உள்ள மதுக் கடைகளை மூட வேண்டும் என்ற அரசு உத்தரவுப்படி மதுரை மாவட்டத்தில் 51 மதுக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டு, இதுவரை 16 கடைகள் மூடப்பட்டுவிட்டன.

இதன் மூலம், 23 மேற்பாா்வையாளா்கள், 49 விற்பனையாளா்கள், 5 உதவி விற்பனையாளா்கள் பணியிழப்புக்கு உள்ளாகினா். இங்கு பணியாற்றிய ஊழியா்களை அவா்களின் கல்வித் தகுதி அடிப்படையில் அரசின் பிற துறைகளில் மாற்றுப் பணி வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டாஸ்மாக் ஊழியா்களை நிரந்தரப் பணியாளா்களாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டது.